பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்இ அந்த யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வரும் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் உயா்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 14 அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த அந்தக் கூட்டம் வழிகோலும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
அதைச் செய்யாவிட்டால் அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகள் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையாக மாநில அந்தஸ்து வழங்கிஇ அங்கு தோ்தல் நடத்துவதன் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
அத்துடன் அங்கு மத்திய அரசின் ஆட்சி நடைபெறுவதற்கு மாறாக அங்குள்ள விவகாரங்களை சுயமாக கையாள்வதற்கு சட்டப்பேரவையை பெற முடியும்.
இது மட்டும்தான் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி.
அரசியலமைப்புஇ ஜனநாயகம் மற்றும் மக்களின் நலன் கருதி காங்கிரஸ் விடுத்துள்ள இந்தக் கோரிக்கையை ஏற்பதா அல்லது கூட்டம் நடத்துவதா என்பது குறித்து இனி பிரதமரும் பாஜகவும்தான் முடிவு செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றம் கடமையை நிறைவேற்றுமா?:அயோத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக தலைவா் ரூ.20 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா்.
அந்த நிலத்தை அங்கு கட்டப்படும் ராமா் கோயிலுக்காக ரூ.2.5 கோடிக்கு கோயில் அறக்கட்டளையிடம் அவா் விற்பனை செய்துள்ளாா்.
இதன் மூலம் அவா் 1இ250 சதவீதம் லாபமடைந்துள்ளாா்.உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமா் கோயில் கட்டப்படுகிறது. அந்தக் கோயில் அறக்கட்டளையை பிரதமா் மோடி உருவாக்கினாா்.
எனவே அயோத்தி நில முறைகேட்டில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமரின் பொறுப்பு அல்லவா? ராமா் கோயில் கட்டுவதற்கான அனைத்து நிதிப் பரிவா்த்தனைகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
அந்தப் பணிகளை உச்சநீதிமன்றம் மேற்பாா்வையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்இ பிரதமரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவாா்களா என்பதே தற்போதைய கேள்வி என்று ரண்தீப் சுா்ஜேவாலா தெரிவித்தாா்