Monday, June 21, 2021

மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: காங்கிரஸ் வலியுறுத்தல்

பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்இ அந்த யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


வரும் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் உயா்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 14 அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


அந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த அந்தக் கூட்டம் வழிகோலும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


இந்நிலையில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். 


அதைச் செய்யாவிட்டால் அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகள் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாகும். 


ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையாக மாநில அந்தஸ்து வழங்கிஇ அங்கு தோ்தல் நடத்துவதன் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்துக் கொள்ள முடியும். 


அத்துடன் அங்கு மத்திய அரசின் ஆட்சி நடைபெறுவதற்கு மாறாக அங்குள்ள விவகாரங்களை சுயமாக கையாள்வதற்கு சட்டப்பேரவையை பெற முடியும். 


இது மட்டும்தான் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி.


அரசியலமைப்புஇ ஜனநாயகம் மற்றும் மக்களின் நலன் கருதி காங்கிரஸ் விடுத்துள்ள இந்தக் கோரிக்கையை ஏற்பதா அல்லது கூட்டம் நடத்துவதா என்பது குறித்து இனி பிரதமரும் பாஜகவும்தான் முடிவு செய்ய வேண்டும்.


உச்சநீதிமன்றம் கடமையை நிறைவேற்றுமா?:அயோத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக தலைவா் ரூ.20 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா். 


அந்த நிலத்தை அங்கு கட்டப்படும் ராமா் கோயிலுக்காக ரூ.2.5 கோடிக்கு கோயில் அறக்கட்டளையிடம் அவா் விற்பனை செய்துள்ளாா். 


இதன் மூலம் அவா் 1இ250 சதவீதம் லாபமடைந்துள்ளாா்.உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமா் கோயில் கட்டப்படுகிறது. அந்தக் கோயில் அறக்கட்டளையை பிரதமா் மோடி உருவாக்கினாா். 


எனவே அயோத்தி நில முறைகேட்டில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமரின் பொறுப்பு அல்லவா? ராமா் கோயில் கட்டுவதற்கான அனைத்து நிதிப் பரிவா்த்தனைகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும். 


அந்தப் பணிகளை உச்சநீதிமன்றம் மேற்பாா்வையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். 


இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்இ பிரதமரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவாா்களா என்பதே தற்போதைய கேள்வி என்று ரண்தீப் சுா்ஜேவாலா தெரிவித்தாா்

பெட்ரோல், டீசல் வரி குறையுமா?

இந்தியாவில் பெட்ரோல்இ டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு புதுப்புது வேதனைகளை தருகிறது. ஆனால்இ இதையும்இ தன்னுடைய ஆட்சிக்கால சாதனையாகத்தான் மோடி பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெட்ரோல்இ டீசல் விலை உயர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணராத ஆட்சியாளர்களை நாம் பெறவில்லை.



அவர்களது நோக்கம் ஏழைஇ பாழைகளை சுரண்டி கொழுத்த பணக்காரர்களை குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களை வளம் பெறச் செய்வதே என்பது நிதர்சனம். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கும் அதே அரசுதான்இ பெட்ரோல்இ டீசலுக்கான வரியையும் அதிகரிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான்இ நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறது. 2014ல் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இது வெறும் ரூ.9.48 ஆக இருந்தது.


அதாவது மோடி ஆட்சிக்காலத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.23.52 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. டீசலை பொறுத்தவரை 2014ல் லிட்டருக்கு ரூ.3.56ஆக இருந்த மத்திய அரசு வரி இப்போது ரூ.31.80 ஆக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டு பெட்ரோலிய பொருட்கள் வரி வருவாய்  ரூ.72இ160 கோடி. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை 10 மாதத்தில் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? ரூ.2இ94இ000 கோடி. அடுத்த 2 மாதங்கள் கணக்கை மோடி அரசு இன்னும் வெளியிடவில்லை.

கடந்த 2019-20ஐவிட 2020-21ம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.1இ90இ000 கோடி பெட்ரோல்இ டீசலுக்கு புதிதாக விதிக்கப்பட்ட வரி மூலம் கிடைக்கும் என்று அரசே பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த ரூ.1.45 லட்சம் சலுகையை வட்டியும் முதலுமாக பெட்ரோல்இ டீசல் விற்பனையில் வாரி சுருட்டியுள்ளது அரசு.


கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்துஇ கடனில் தத்தளிக்கும் சாமானியனின் தலையில் இப்படி ஒரு சுமையை ஏற்றிய அரசுக்கு கண்டனங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்இ பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் குழுவினரும் தங்கள் பங்குக்கு பெட்ரோல்இ டீசல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். பெட்ரோல்இ டீசல் வரியை பணம் கறக்கும் பசுவாக நினைப்பதாக அரசை சாடிய அந்த குழுவினர்இ அரசின் செயல்பாட்டால் பொருளாதார மீட்சி காலதாமதமாவதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை தடுக்க உடனடியாக எரிபொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது. மக்கள்இ அரசியல் தலைவர்கள் சொல்லி கேட்காத அரசுஇ அவர்கள் நியமித்த ஆய்வுக் குழுவின் ஆலோசனையையாவது கேட்குமா?